Wednesday 14 April, 2010

சில புகைப்படங்கள்

திருப்பதியில் பாசி விற்கும் ரோஸி என்ற நரிக்குறவப் பெண் (அவங்க கூட ஜெயந்தியும் மோனிகாவும்)
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஜெயந்தியும் மோனிகாவும் ஷாப்பிங் செய்த போது

இந்த முகமூடிகளை வீட்டில் மாட்டினால் ஆவிகள் அணுகாது என்பது நேபாளிகளின் நம்பிக்கை
ஒரு படத்தில் நேபாளு கோபாலு என்று வடிவேல் பாடிய இடம்
வாரணாசியில் தினமும் கங்கைக்கரையில் நடைபெறும் ஆரத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு

Sunday 11 April, 2010

பருவம் மறந்த மரம்

வசந்தத்தில் கூட
இலை உதிர்க்கும்
முட்டாள் மரமே

நிறுத்து இதை.
இது
வண்ணப் பூக்களை
வாரி இறைக்கும்
வசந்த காலம்.

Saturday 10 April, 2010

நிழல் மரமும் வழிப்போக்கனும்

என் பயணம் நீளமானது
கடும் வெயில்
நடை தளர்ந்த போது
மரம் ஒன்று கண்டேன்
கிளிகள் கொஞ்சும் மாமரம்
அழகு அழகு அத்தனை அழகு
நிழலில் அமர்ந்தேன்
சொர்க்கம் கண்டேன்

மரமே, உனக்கு நன்றி
கால்களை நீட்டி
கண்கள் சிறிது அயர்ந்தேன்

மரமும் என்னைக் கண்டு
மகிழ்ந்தது போலத்தான் இருந்தது
சில நிமிட உறக்கம்

விழித்து எழுந்த போது
மரத்தடி முழுதும்
மனிதர்களும் மாடுகளும்.

என் மரத்தடியில்
இவர்களுக்கு என்ன வேலை ?
கோபம் மிகுந்தது

அது ஒரு நொடி மட்டுமே

மறு நொடி என் மனதில்
பயணம் பற்றிய கவலை.
எழுந்தேன் புறப்பட்டேன்.

மரமே, நன்றி.
உன் நிழல் எனது சொந்தமில்லை.
எனக்கு பயணம் தான் முக்கியம்.

மீண்டும் வெயிலில்
பயணம் தொடர்ந்தது.
களைப்படையும் போது

காண்பேன் மற்றொரு மர நிழலை.

மன்னிப்பாய் மரமே,
உன்னை என் சொந்தம் என்று
ஒரு கணம் நினைத்ததற்கு.