Thursday 27 May, 2010

இது எங்கள் கோடை


ஏப்ரல் மாதம் வரை
எங்கள் வீட்டில் நிலவிய வெப்பம்
மே மாதத்தில்
காணாமல் போனது 

வீடெங்கும் அழகு
நாள் எல்லாம் இனிமை
மின்வெட்டு என்பதை
நாங்கள் உணர்வதே இல்லை

அங்கங்கே குவிந்து கிடக்கும்
புத்தகங்களும் உடைகளும்
தரை முழுவதும் பரவிக்கிடக்கும்
தலை முடிகளும்
அழகாக்குகின்றன
எங்கள் வீட்டை

படுக்கைகளில் பரப்பப்பட்ட
சுடிதார்களும் அணிகலன்களும்
இடம் மாற்றி வைக்கப்பட்ட
செல்போன் சார்ஜர்களும்
மூலையில் கிடக்கும்
தொலைக்காட்சி ரிமோட்டும்
ஏனோ எரிச்சல் தருவதில்லை

குளியலறைகளில் புதிய வாசனைகள்
கண்ணாடி முன்பு
விதவிதமான டியூபுகள் கிரீம்கள்
காணமல் போன என் சீப்பு
இதெல்லாம் என் முகத்தில்
உண்டாக்கும் புன்னகைகள்

நாள்முழுதும் அலறும்
செல்போன் பாடல்கள்
நள்ளிரவு வரை
அம்மாவுடன் படுத்துக்கொண்டு
குசுகுசுக்கும் குரல் ஓசைகள்
எனக்கு தாலாட்டு போலவே
கேட்கின்றன

ஹாஸ்டலில் இருக்கும்
உங்கள் மகள்கள்
வீடு வந்தால்
உங்களுக்கும்
கோடை சுகம்தான்.

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem270510.asp

No comments:

Post a Comment