விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - இவங்க பண்ற அட்டகாசம் தாங்கவே இல்லை. இந்த பசங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போறாங்களா இல்லையா? பாடம் படிக்கவும் விளையாடவும் இவங்களுக்கு நேரம் இருக்கா இல்லையா?
இந்த பிள்ளைகள் பாடுற பாட்டுக்கு இவங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
வரிசையா உட்கார்ந்து கைதட்டி செயற்கையா சிரிச்சு தலையாட்டும் அம்மாக்களும் அப்பாக்களும் தாத்தா பாட்டிகளும் வேற வேலை வெட்டி பாக்கறதில்லையா? குழந்தைகள் ஜாலியாக பாடி என்ஜாய் பண்ணாமல் வெற்றி தோல்விக்கு சிரிச்சும் அழுதும் தங்கள் மென்மையான மனதை கஷ்டப்படுத்த வேண்டுமா?
இவ்வளவு அழுத்தம் இந்த சின்ன வயசில் இவங்களுக்கு தேவை தானா? எல்லா குழந்தைகளையும் போல இயல்பான இளம்பருவ வாழ்க்கை இந்த குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டுமா?
ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேற்றப்படும் குழந்தைகள் கண் கலங்குவதையும் பெரிய மனுஷத்தனமாக சிரித்து உணர்வுகளை மறைப்பதும் என்னால் ரசிக்க முடியவில்லை. குழந்தைகளை குழந்தைகளாக வாழவும் வளரவும் விடுங்கப்பா.
Tuesday 23 March, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நினைத்தேன் சொல்கிறீர்கள் ராஜா
ReplyDeleteஉண்மைதான்