Monday 22 March, 2010

எனது புதிய வலைப்பதிவு

இது புதிய முயற்சி.
தினமும் ஒரு பக்கம் மட்டும் எழுதலாம் என்று எண்ணம்.
முதலில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி, தேனம்மை.
உங்கள் யோசனை இது.
---------
குடையும் மழையும்

 உன்மேல் பட்டு விழும்
சின்ன மழைத்துளி
செய்த தவமென்ன?

என் குடைக்கு மட்டும்
சாபமிட்டது யார்?

உள்ளே வா.
விமோசனம் பிறக்கட்டும்
என் குடைக்கும்.
எனக்கும்.

4 comments:

  1. பாராட்டுக்கள் ஜெயராஜ் ...!!!

    அருமை ..முதல் கவிதையிலேயே எல்லோரையும் உங்கள் குடையின் கீழ் கொண்டு வந்துருவீங்க போல இருக்கே...!!!

    தொடர்ந்து எழுதுங்கள் அருமை நண்பரே..!!!

    ReplyDelete
  2. மேலே சொல்லப்பட்டதையே நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. கருத்துரைகளையெல்லாம் எதிர்பார்த்துக் 
    கொண்டிருக்கக்ககூடாது, அவனவன் 
    வலைத்தளங்களை துவங்கி பலபெயர்களில் 
    ஈமெயில் ஐடி தயாரித்து தங்களுக்கு தாங்களே
    கருத்துரை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
    நீங்கள் வேற உலகம் தெரியாமல்..

    ReplyDelete