Thursday 25 March, 2010

சின்னச் சின்ன சந்தேகங்கள்

  1. ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைக்கும்போது இத்தனை பேர் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
  2. ரெஸ்டாரென்ட் வாசலில் பிச்சை எடுக்கும் பெண்கள் எல்லாருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தை எப்படி இருக்கிறது?
  3. நெடுஞ்சாலைகளில் மோட்டல் என்ற பெயரில் இயங்கும் இடங்கள் சுகாதார துறை கண்ணில் படுவதில்லையே, ஏன்? 
  4. ரயில் நிலையங்களில் இருப்பதை விட பேருந்து நிலையங்களில் கடைகள் அதிகமாக இருப்பது பயணிகளின் வசதிக்காகவா அல்லது எதாவது வேண்டுதலா? 
  5. பேருந்து நிலையங்களில் சேரும் குப்பைகள் பயணிகள் வீட்டில் இருந்து அள்ளிக்கொண்டு வந்து போடுவதா அல்லது கடைக்காரர்கள் போடுவதா?
  6. இந்த குப்பைகளால் இடையுறு ஏற்படுவது கடைக்கரர்களுக்கா அல்லது பயணிகளுக்கா?
  7. பேருந்து நிலையங்களில் கட்டண கழிப்பறைகள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன? பயணிகள் சுகாதாரத்தை மனதில் கொண்டா? ஆம் என்பவர்கள் இந்த இடங்களில் பத்து நிமிடங்கள் நின்று விட்டு வர விரும்புவார்களா?
  8. அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் நின்றுகொண்டு தான் பயணிக்க வேண்டும் என்பது சட்டமா?
  9. குடிநீர் எல்லா இடங்களிலும் சுத்தமாகவும் இலவசமாகவும் கிடைக்க வழி உண்டா?

1 comment:

  1. 8ம் எட்ட வழியிருக்கு ஆனால் 9 ...

    ReplyDelete